அதிரை பசுமை

அதிரை பசுமை
அவன் தான், தன்னுடைய அருள் (மாரிக்)கு முன், நற்செய்தியாக (குளிர்ந்த) காற்றுகளை அனுப்பிவைக்கிறான்; அவை கனத்த மேகங்களைச் சுமக்கலானதும் நாம் அவற்றை இறந்து கிடக்கும் (வறண்ட) பூமியின் பக்கம் ஓட்டிச் சென்று, அதிலிருந்து மழையைப் பொழியச் செய்கின்றோம்; பின்னர் அதைக் கொண்டு எல்லாவிதமான கனிவகை (விளைச்சல்)களையும் வெளிப்படுத்துகின்றோம் - இவ்வாறே நாம் இறந்தவர்களையும் எழுப்புவோம். (எனவே இவற்றை யெல்லாம் சிந்தித்து) நீங்கள் நல்லுணர்வு பெறுவீர்களாக. (ஒரே விதமான மழையைக் கொண்டே) வளமான பூமி தன் இறைவன் கட்டளையைக் கொண்டு (செழுமையாகப்) பயிர் (பச்சை)களை வெளிப்படுத்துகிறது; ஆனால் கெட்ட களர் நிலம் சொற்பமான விளைச்சலையே வெளிப்படுத்துகிறது; நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்வாறே நாம் வசனங்களை விவரிக்கின்றோம். ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்) : 57,58

Saturday, November 29, 2014

மண் வளத்தை பாதுகாக்க - நீர் ஆதாரத்தை பெருக்க அதிரையில் 30 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி ! [ படங்கள் இணைப்பு ]

தமிழக முதல்வர் மண் வளத்தைப் பாதுகாக்கவும், நீர் ஆதாரத்தைப் பெருக்கவும் சிறப்பான முறையில் திட்டங்கள் செயல்படுத்த உத்தரவிட்டதன் அடிப்படையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் இயற்கை வளத்தினை பெருக்கும் நோக்கில் 30 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் இன்று மாவட்டம் முழுவதும் மரம் நடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அதன் படி இன்று அதிரையில் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 30 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இவற்றை அதிரையின் முக்கிய பகுதிகளில் நடப்பட்டு வருகிறது.

இன்று காலை அதிரை பேரூராட்சி அலுவலகம், காவல் நிலையங்கள், அரசு மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அதிரை காவல்துறை ஆய்வாளர் திரு. ரவிச்சந்திரன், பேரூராட்சி தலைவர் அஸ்லம், துணை தலைவர் பிச்சை, பேரூராட்சி செயல் அலுவலர் முனியசாமி, அரசு மருத்துவனையின் மருத்துவர்கள், வார்டு உறுப்பினர்கள் சேனா மூனா ஹாஜா முகைதீன், அப்துல் லத்திப், சிவக்குமார், முத்துக்குமார் உள்ளிட்ட ஆர்வலர்கள் பலர் பங்கேற்றனர்.

No comments: