அதிரை பசுமை

அதிரை பசுமை
அவன் தான், தன்னுடைய அருள் (மாரிக்)கு முன், நற்செய்தியாக (குளிர்ந்த) காற்றுகளை அனுப்பிவைக்கிறான்; அவை கனத்த மேகங்களைச் சுமக்கலானதும் நாம் அவற்றை இறந்து கிடக்கும் (வறண்ட) பூமியின் பக்கம் ஓட்டிச் சென்று, அதிலிருந்து மழையைப் பொழியச் செய்கின்றோம்; பின்னர் அதைக் கொண்டு எல்லாவிதமான கனிவகை (விளைச்சல்)களையும் வெளிப்படுத்துகின்றோம் - இவ்வாறே நாம் இறந்தவர்களையும் எழுப்புவோம். (எனவே இவற்றை யெல்லாம் சிந்தித்து) நீங்கள் நல்லுணர்வு பெறுவீர்களாக. (ஒரே விதமான மழையைக் கொண்டே) வளமான பூமி தன் இறைவன் கட்டளையைக் கொண்டு (செழுமையாகப்) பயிர் (பச்சை)களை வெளிப்படுத்துகிறது; ஆனால் கெட்ட களர் நிலம் சொற்பமான விளைச்சலையே வெளிப்படுத்துகிறது; நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்வாறே நாம் வசனங்களை விவரிக்கின்றோம். ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்) : 57,58
Showing posts with label செடியன் குளம். Show all posts
Showing posts with label செடியன் குளம். Show all posts

Saturday, December 13, 2014

கானல் நீராகும் செடியன் குளம் !? தேவை போர்க்கால நடவடிக்கை!

கானல் நீர் என்ற சொல்லுக்கு விளக்கம் பெற வேண்டிய நிலையில் அதிரையர்கள் இல்லை என்றாலும் அது நமது அஜாக்கிரதையால் செயல்முறை விளக்கமாகிவிடுமோ என அஞ்சத் தோன்றுகிறது இன்றைய செடியன்குளத்தின் நிலை.

செடியன் குளத்தின் அருமை பெருமைகளையும், அதன் இன்றியமையா தேவையையும் ஒவ்வொருவரும் அறிந்துள்ளோம். சுமார் 3 ஆண்டுகளாக தண்ணிரின்றி வறண்டு காணப்பட்ட செடியன்குளம் இன்று அல்லாஹ்வின் அருளால் மனித முயற்சி இல்லாமலேயே மழை நீரால் நிரம்ப இருந்த நிலையில் ஆற்று நீரும் திருப்பி விடப்பட்டு அதன் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழியத் தொடங்கியது, இன்னும் மழை நீர் வந்து கொண்டுதான் இருக்கிறது, அல்லாஹ்விற்கே புகழனைத்தும்.

ஒரு சில மாதங்கள் முன்புவரை செடியன்குளம் பாலைவனமாக காட்சியளித்த காலத்தில் அது ஆழப்படுத்தப்பட்டு தற்போது முழுமையாக நீர் நிரம்பியுள்ள நிலையில், டிஎம்சி கணக்கில் நமக்கு அளவிட முடியாவிட்டாலும் நீரின் அழுத்தம் ( Pressure ) எவ்வாறு இருக்கும் என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள். இந்த அழுத்தத்தை தாங்கும் நிலையில் அதன் வடிகால் பாதை இல்லை என்பதே நமது கவலை தோய்ந்த இந்த கட்டுரையின் நோக்கம்.

வலுவற்ற வடிகால் பாதையால் ஏற்கனவே கசியத் தொடங்கிவிட்ட செடியன்குளம் எந்த நேரத்திலும் உடைத்துக் கொண்டு பிலால் நகரை சேதப்படுத்தும் வாய்ப்புள்ளது மேலும் தொடர் கசிவின் காரணமாகவும் செடியனின் தண்ணீர் கோடைக்கு முன்பே வற்றிவிடக்கூடிய ஆபத்து உள்ளது.

பேரூராட்சியின் சார்பில் மணல் மற்றும் மூடைகளை கொண்டு செப்பனிட முயன்றாலும் அவை பயன்தராத நிலையிலேயே உள்ளன. நாள் ஒன்றுக்கு சராசரியாக 50 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. மழை காலங்களில் சற்று கூடுதலாக வெளியேறும். இவ்வாறு வெளியேறும் நீர் பிலால் நகர் பகுதியின் பிரதான சாலை வழியே செல்வதால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள், பள்ளிகளுக்கு தொழுகைக்கு செல்வோர் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் ஓடிக்கொண்டிருக்கும் தண்ணீரிலிருந்து வெளியேறும் பாம்புகள் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து விடுவதால் இப்பகுதியினர் பெரும் அச்சத்ததில் உள்ளனர். தண்ணீர் ஆங்காங்கே தேங்கி காணப்படுவதால் கொசு தொல்லை பெருகவும், சுகாதார சீர்கேடும் ஏற்பட வாய்ப்புள்ளது.

சம்பந்தபட்டவர்கள், தன்னார்வலர்கள், சங்க பொறுப்பாளர்கள் என அனைவரும் போர்க்கால அடிப்படையில் செடியனின் நீரை காப்பாற்ற தேவையான முன்னேற்பாடுகளை செய்ய உடன் முன்வர வேண்டும் என கோருகிறோம்.

வடிகால் கிணற்றை தோண்டி சிமெண்ட் கலவைகளை கொண்டு பலப்படுத்த வேண்டும் மேலும் வழியும் தண்ணீர் எத்தகைய தடங்கலுமின்றி செய்னாங்குளத்திற்கு சென்றடையும் வகையில் வாய்க்கால் சரிப்படுத்தப்பட வேண்டும் மேலும் ஊதாங்குழல் சைஸூக்கு பதிக்கப்பட்டுள்ள குழாய்களின் உடைப்புக்கள் மற்றும் ஒழுகும் இணைப்புக்கள் சரிபடுத்தப்பட வேண்டும். மேலும் பிலால் நகர் பாதிக்காத வகையில் தேவையான அளவிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இல்லையெனில், கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத அவல நிலைக்கு நாமே உதாரணமாகி விடுவோம் என எச்சரிக்கிறோம். இதுதொடர்பாக தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள மேலத்தெரு, கீழத்தெரு பொறுப்பாளர்களை அழைக்கிறோம். செய்வீர்களா ? அல்லது செடியன்குளம் என்பது கானல் நீராகுமா ?

அதிரை நியூஸ் குழு

குளத்திலிருந்து கசிந்து வீணாக வெளியேறும் தண்ணீர்

பிலால்நகர் குடியிருப்பின் வழியாக வழிந்தோடும் காட்சி...

Wednesday, November 26, 2014

ஏரி போல் காட்சியளிக்கும் செடியன் குளம்[ படங்கள் இணைப்பு ]

அதிரையின் பொக்கிஷங்களில் ஒன்று செடியன் குளம். சுமார் 3 ஹெக்டர் 39 ஏர்ஸ் பரப்பளவில் அமைந்துள்ள இந்த குளம் மிகவும் பழமை வாய்ந்தது. வரலாற்று சிறப்பு மிக்கது. இந்த குளம் அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் நீராடி மகிழ்வதற்கு மாத்திரமல்ல, ஆடு மாடுகள், பறவைகள் நீர் அருந்தி செல்வதற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பயன்தரக்கூடியதாகவும், நீர் ஆதாரத்தை இப்பகுதிகளுக்கு வாரி வழங்கக்கூடியதாகவும் இருந்து வருகிறது.

கடந்த இரண்டு வருடங்களாக நீரின்றி வறண்டு காணப்பட்ட  செடியன் குளம் கடந்த சில வாரங்களாக அதிரை சுற்று வட்டார பகுதிகளில் பெய்த தொடர் மழையாலும், கடந்த மூன்று தினங்களாக சிஎம்பி வாய்க்கால் மூலம் பெத்தான் குளம் வழியாக தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் ஆற்று நீராலும் நிரம்பி, ஏரி போல் காட்சியளிக்கிறது.

தற்போது அதிரையில் மிதமாக பெய்துவரும் தொடர் மழையையும் பொருட்படுத்தாது இப்பகுதியினர் குளத்தை ஆர்வத்துடன் வந்து பார்வையிட்டு செல்கின்றனர். நீரின் மட்டம் இன்னும் 1 அடி உயர்ந்தால், குளம் நிரம்பி வழிந்து ஓடும் நிலையில் உள்ளது. பொதுப்பணித்துறை சார்பில் தண்ணீர் வழங்குவதற்கு ஒருவார கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் ஓரிரு தினங்களில் குளத்திலிருந்து நீர் நிரம்பி இதன் இணைப்பில் உள்ள வாய்க்கால் வழியாக அருகில் உள்ள கீழத்தெரு செயனாங் குளத்திற்கு தண்ணீர் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுஒருபுறமிருக்க, செடியன் குளத்தின் மேட்டை சுற்றி காணப்படும் புதர்களையும், தேவையற்ற வளர்ந்து காணப்படும் செடி கொடிகளையும் அப்புறப்படுத்தவும், பெண்கள் குளிக்கும் கரையை சுற்றி பிரதியோகமாக தடுப்பு வேலி ஏற்படுத்தவும் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல் குளத்தின் மேட்டு பகுதியில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தவும் கோரிக்கை எழுத்துள்ளது. மேலும் செடியன் குளத்திலிருந்து நிரம்பி வழியும் தண்ணீர் அருகில் உள்ள தாழ்வான பகுதியாக இருக்கும் பிலால் நகரில் புகாதவாறு முன்னேற்பாடுகளை செய்யவும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

தற்போது ஏரி போல் காட்சியளிக்கும் செடியன் குளத்தின் புகை படங்கள் இதோ உங்களின் பார்வைக்கு...



நிரம்பும் செடியன் குளம்
அதிரை பேரூர் நிர்வாகத்தின் முயற்சியில் செடியன் குளத்திற்கு ஆற்று நீர் தற்போது மூன்று நாட்களாக வந்து கொண்டு இருக்கிறது.இன்னும் சில தினங்களில் குளம் நிரம்பும் என்று எதிர்பார்க்கபடுகிறது.மேலும் குளத்தின் நீர் மட்டம் அதிகரித்து வருவதால் அப்பகுதி மக்கள் குளத்தில் குளிக்க துவங்கி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.




Thanks to: அதிரை எக்ஸ்பிரஸ்

Sunday, November 23, 2014

செடியன்குளத்திற்கு இன்று மாலைக்குள் தண்ணீர் வந்தடையும்...

நமதூரில் உள்ள அணைத்து குளங்களுக்கும் அதிரை பேரூர் மன்றம் தீவிர முயற்சி செய்து தண்ணீர் நிரப்பி வந்த நிலையில் செடியன் குளத்திற்கு தண்ணீர் நிரப்ப இன்று அதிகாலை முதல் பேரூர் மன்ற ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .மேலும் CMP வாய்கால் வழியாக தண்ணீர் வந்து பெத்தாங்குளம் வழியாக இன்று மாலைக்குள்  செடியன்  குளத்திற்கு தண்ணீர் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெத்தாங்குளத்திற்கு தண்ணீ ரை திருப்புவதற்காக மணல் மூடைகளை வைத்து தடுப்பு ஏற்பாடு செய்து வைத்திருக்கும் காட்சி 

Thanks to News Source:
 http://www.adiraixpress.in/2014/11/blog-post_0.html#.VHHVwmeaUos

மழைநீரால் நிரம்பும் தருவாயில் செடியன் குளம் [ படங்கள் இணைப்பு ]

கடந்த சில வாரங்களாக அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த தொடர் மழையால் செடியன் குளத்திற்கு மழைநீர் வர துவங்கியது. தற்போது குளத்தில் பொதுமக்கள் குளிக்கும் அளவில் போதுமான தண்ணீர் காணப்படுகிறது. இதில் அதிரையர்கள் தினமும் ஆர்வத்துடன் குளித்து வருகின்றனர். இன்னும் சில தினங்கள் மழை நீடித்து பெய்தால் குளம் முழுவதும் நிறைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Thanks to News Source:
http://www.adirainews.net/2014/11/blog-post_809.html