தஞ்சை மாவட்ட கடலோர பகுதியில் தற்போது நல்ல மழை பெய்து வருகின்றன. கடந்த இரண்டு வருடங்களாக பருவமழை இல்லாதலால் நமது நிலத்தடி நீர் 
முற்றிலுமாக குறைந்து போய் உள்ளன. கோடை காலங்களில் நமது பகுதியில் தண்ணீர் 
பஞ்சம் இருந்தன அதனால் இந்த ஆண்டு பருவமழை நன்றாக பெய்து வருவதால் இதை 
பயன்படுத்தி நமது பகுதியில் உள்ள குளம், குட்டைகளை தூர் வாரி ஆழப்படுத்தி வரும் மழைநீரை சேமித்து வைத்தோமானால் கோடைகாலங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டதாவறு பார்த்துகொள்ளலாம்.
இதைவிட 
முக்கியமானது வீடுகளில் மழைநீர் சேமிப்பது. மழைநீர் சேமிப்பு என்பது சிலபேர்
 தெரியாமல் தண்ணீர் தொட்டிகட்டி சேமிப்பது என்று தவறாக புரிந்துகொண்டு அதை 
செயல்படுத்தவில்லை மழைநீர் சேமிப்பு என்பது நமது மாடியில் விழும் மழைநீரை 
நேரடியாக நமது கிணறு அல்லது போர்வேல் அருகில் 4 அடி விட்டு 3.அடி அகலமும் 
8.அடி உயரம் குழியும் தோண்டி ஓரத்தில் சிமிண்ட் உரையோ அல்லது கல்லோ வைத்து 
கட்டி அந்த பள்ளத்தில் கருங்கல் ஜல்லிகளை அதில் நிரப்ப வேண்டும்.
மழைநீரை 
நேரடியாக அதில் விட்டோமானால் நமது நிலத்தடிக்கே தண்ணீர் போய் கிணறும் 
நிறையும். தஞ்சை மாவட்ட மேல்பகுதியில் நிலத்தடி நீர் குறைய காரணம் கடந்த  கருணாநிதி அவர்களின் 
ஆட்சியில் ராமநாதபுரம் கூட்டு குடிநீர் 
திட்டமாகும் வருடம் முழுவதும் ராட்சத போர்வேல் போட்டு கொண்டு செல்வதால் வரும்
 காவிரி நீர் மேல் பகுதியிலயே சேமிக்கப்படுகிறது அதனால் நமக்கு தண்ணீர் 
கிடைக்க வாய்ப்பில்லை இந்த கூட்டு குடிநீர் திட்டம் நல்ல திட்டமாக 
இருந்தாலும் தற்போது செய்திகளில் வருவது அதிர்ச்சி அடைய வைக்கின்றன சில 
சமூக விரோதிகளால் ராமநாதபுரம் பகுதியில் குழாய்கள் உடைக்கப்பட்டு 
இங்கிருந்து போகும் தண்ணீர் வீண்விரையம் ஆகிறது அதுமட்டுமல்ல தற்போது அதிமுக 
(ஜெயலலிதா) ஆட்சியில் மேலத்தஞ்சை பகுதியில் இருக்கும் அணையை உயர்த்தி 
கட்டும்பணி நடந்துகொண்டு இருக்கிறது அவர்கள் சேமித்தது போக மீதம் 
உள்ளதுதான் நமக்கு வரும் எந்த ஆட்சி வந்தாலும் கடை மடை பகுதியான நம் பகுதி 
புறக்கணிக்கப்படுகிறது அதனால் அதற்கு சிறந்த வழி மழைநீர் சேமிப்பதே இதை 
ஒவ்வருவருக்கும் எடுத்து சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் 
....PLEASE SHARE......
 


 
No comments:
Post a Comment