அதிரை பசுமை

அதிரை பசுமை
அவன் தான், தன்னுடைய அருள் (மாரிக்)கு முன், நற்செய்தியாக (குளிர்ந்த) காற்றுகளை அனுப்பிவைக்கிறான்; அவை கனத்த மேகங்களைச் சுமக்கலானதும் நாம் அவற்றை இறந்து கிடக்கும் (வறண்ட) பூமியின் பக்கம் ஓட்டிச் சென்று, அதிலிருந்து மழையைப் பொழியச் செய்கின்றோம்; பின்னர் அதைக் கொண்டு எல்லாவிதமான கனிவகை (விளைச்சல்)களையும் வெளிப்படுத்துகின்றோம் - இவ்வாறே நாம் இறந்தவர்களையும் எழுப்புவோம். (எனவே இவற்றை யெல்லாம் சிந்தித்து) நீங்கள் நல்லுணர்வு பெறுவீர்களாக. (ஒரே விதமான மழையைக் கொண்டே) வளமான பூமி தன் இறைவன் கட்டளையைக் கொண்டு (செழுமையாகப்) பயிர் (பச்சை)களை வெளிப்படுத்துகிறது; ஆனால் கெட்ட களர் நிலம் சொற்பமான விளைச்சலையே வெளிப்படுத்துகிறது; நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்வாறே நாம் வசனங்களை விவரிக்கின்றோம். ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்) : 57,58

Saturday, March 21, 2015

இன்று உலக வன நாள் (மார்ச்--21)

இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 20.5% வனங்கள்.
அதாவது 6,75,539 சதுர கிலோமீட்டர்.

இந்தியா போன்ற வெப்பநிலை கொண்டநாட்டில்
33% வனங்கள் இருக்கவேண்டும்.

இல்லாதது ஒருபக்கம்
இருப்பதிலும் சராசரியாக வருடம் ஒன்றிற்கு
1.3 மில்லியன் ஹெக்டேர் வனங்கள் இங்கு அழிக்கப்படுகிறது.

ஒரு ஹெக்டேர் என்பதை
2.47 ஆல் பெருக்கினால் வருவதே
ஒரு ஏக்கர்.

தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பு
1,30,058 சதுர கிலோமீட்டர்

இதில் வனங்களின் பரப்பு
21,482 சதுர கிலோமீட்டர்
இது 16.5%

அப்புறம் மழை எங்குட்டுக்கூடி பெய்யும்?
இன்று உலக வன நாள் (மார்ச்--21)

நன்றி: சூர்யா சேவியர்

FB / Shared By : N. Senthil Kumar

No comments: