அதிரை பசுமை

அதிரை பசுமை
அவன் தான், தன்னுடைய அருள் (மாரிக்)கு முன், நற்செய்தியாக (குளிர்ந்த) காற்றுகளை அனுப்பிவைக்கிறான்; அவை கனத்த மேகங்களைச் சுமக்கலானதும் நாம் அவற்றை இறந்து கிடக்கும் (வறண்ட) பூமியின் பக்கம் ஓட்டிச் சென்று, அதிலிருந்து மழையைப் பொழியச் செய்கின்றோம்; பின்னர் அதைக் கொண்டு எல்லாவிதமான கனிவகை (விளைச்சல்)களையும் வெளிப்படுத்துகின்றோம் - இவ்வாறே நாம் இறந்தவர்களையும் எழுப்புவோம். (எனவே இவற்றை யெல்லாம் சிந்தித்து) நீங்கள் நல்லுணர்வு பெறுவீர்களாக. (ஒரே விதமான மழையைக் கொண்டே) வளமான பூமி தன் இறைவன் கட்டளையைக் கொண்டு (செழுமையாகப்) பயிர் (பச்சை)களை வெளிப்படுத்துகிறது; ஆனால் கெட்ட களர் நிலம் சொற்பமான விளைச்சலையே வெளிப்படுத்துகிறது; நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்வாறே நாம் வசனங்களை விவரிக்கின்றோம். ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்) : 57,58

Sunday, November 23, 2014

செடியன்குளத்திற்கு இன்று மாலைக்குள் தண்ணீர் வந்தடையும்...

நமதூரில் உள்ள அணைத்து குளங்களுக்கும் அதிரை பேரூர் மன்றம் தீவிர முயற்சி செய்து தண்ணீர் நிரப்பி வந்த நிலையில் செடியன் குளத்திற்கு தண்ணீர் நிரப்ப இன்று அதிகாலை முதல் பேரூர் மன்ற ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .மேலும் CMP வாய்கால் வழியாக தண்ணீர் வந்து பெத்தாங்குளம் வழியாக இன்று மாலைக்குள்  செடியன்  குளத்திற்கு தண்ணீர் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெத்தாங்குளத்திற்கு தண்ணீ ரை திருப்புவதற்காக மணல் மூடைகளை வைத்து தடுப்பு ஏற்பாடு செய்து வைத்திருக்கும் காட்சி 

Thanks to News Source:
 http://www.adiraixpress.in/2014/11/blog-post_0.html#.VHHVwmeaUos

No comments: