அதிரை பசுமை

அதிரை பசுமை
அவன் தான், தன்னுடைய அருள் (மாரிக்)கு முன், நற்செய்தியாக (குளிர்ந்த) காற்றுகளை அனுப்பிவைக்கிறான்; அவை கனத்த மேகங்களைச் சுமக்கலானதும் நாம் அவற்றை இறந்து கிடக்கும் (வறண்ட) பூமியின் பக்கம் ஓட்டிச் சென்று, அதிலிருந்து மழையைப் பொழியச் செய்கின்றோம்; பின்னர் அதைக் கொண்டு எல்லாவிதமான கனிவகை (விளைச்சல்)களையும் வெளிப்படுத்துகின்றோம் - இவ்வாறே நாம் இறந்தவர்களையும் எழுப்புவோம். (எனவே இவற்றை யெல்லாம் சிந்தித்து) நீங்கள் நல்லுணர்வு பெறுவீர்களாக. (ஒரே விதமான மழையைக் கொண்டே) வளமான பூமி தன் இறைவன் கட்டளையைக் கொண்டு (செழுமையாகப்) பயிர் (பச்சை)களை வெளிப்படுத்துகிறது; ஆனால் கெட்ட களர் நிலம் சொற்பமான விளைச்சலையே வெளிப்படுத்துகிறது; நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்வாறே நாம் வசனங்களை விவரிக்கின்றோம். ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்) : 57,58

Sunday, November 23, 2014

மழைநீரால் நிரம்பும் தருவாயில் செடியன் குளம் [ படங்கள் இணைப்பு ]

கடந்த சில வாரங்களாக அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த தொடர் மழையால் செடியன் குளத்திற்கு மழைநீர் வர துவங்கியது. தற்போது குளத்தில் பொதுமக்கள் குளிக்கும் அளவில் போதுமான தண்ணீர் காணப்படுகிறது. இதில் அதிரையர்கள் தினமும் ஆர்வத்துடன் குளித்து வருகின்றனர். இன்னும் சில தினங்கள் மழை நீடித்து பெய்தால் குளம் முழுவதும் நிறைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Thanks to News Source:
http://www.adirainews.net/2014/11/blog-post_809.html

No comments: