அதிரை பசுமை

அதிரை பசுமை
அவன் தான், தன்னுடைய அருள் (மாரிக்)கு முன், நற்செய்தியாக (குளிர்ந்த) காற்றுகளை அனுப்பிவைக்கிறான்; அவை கனத்த மேகங்களைச் சுமக்கலானதும் நாம் அவற்றை இறந்து கிடக்கும் (வறண்ட) பூமியின் பக்கம் ஓட்டிச் சென்று, அதிலிருந்து மழையைப் பொழியச் செய்கின்றோம்; பின்னர் அதைக் கொண்டு எல்லாவிதமான கனிவகை (விளைச்சல்)களையும் வெளிப்படுத்துகின்றோம் - இவ்வாறே நாம் இறந்தவர்களையும் எழுப்புவோம். (எனவே இவற்றை யெல்லாம் சிந்தித்து) நீங்கள் நல்லுணர்வு பெறுவீர்களாக. (ஒரே விதமான மழையைக் கொண்டே) வளமான பூமி தன் இறைவன் கட்டளையைக் கொண்டு (செழுமையாகப்) பயிர் (பச்சை)களை வெளிப்படுத்துகிறது; ஆனால் கெட்ட களர் நிலம் சொற்பமான விளைச்சலையே வெளிப்படுத்துகிறது; நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்வாறே நாம் வசனங்களை விவரிக்கின்றோம். ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்) : 57,58

Tuesday, July 28, 2015

செடியன்குளம் - ஒர் அவசர நினைவூட்டல்


நம்புங்கள், இது தான் இன்றைய செடியன் குட்டை, ஸாரி செடியன் குளம். 

சென்ற வருடம் அல்லாஹ்வின் அருள்மழை வர்ஷித்ததால் நிறைந்து வழிந்த குளத்தின் நீர் வெளியேற்றுப்பாதை சரியாக அடைக்கப்படாததால் தொடர்ந்து கசிந்து தண்ணீர் பெருமளவில் வெளியேறி இன்று ஓர் சாக்கடை குட்டை அளவிற்கு காட்சியளிக்கின்றது என்றாலும் இப்போதும் தினமும் நூற்றுக்கணக்காணோர் பயடைனந்து வருகின்றனர் என்ற நிதர்சனம் நிலவும் வறட்சியை வர்ணிக்க வார்த்தைகள் தேவையில்லா அனுதினக் காட்சிகள்.



சென்ற வருடம் குளத்து நீர் வீணாக வெளியேறிக் கொண்டிருந்தபோதே நாம் பலமுறை நடவடிக்கை வேண்டி கோரிக்கை வைத்தோம் அன்று செப்பனிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் இந்த மக்களுக்கு இதைவிட கூடுதலான நீர் தேங்கியிருந்து அவர்களின் மனதையும் உடலையும் நனைத்திருக்கும் அதன் நன்றிப்பெருக்கால் உங்களுக்கும் அல்லாஹ்விடம் மிகுந்த நற்கூலி கிடைத்திருக்கக்கூடும்.

சரி நடந்ததை விடுவோம் இனி நடக்கவிருப்பதை நன்மையாக்க முயல்வோம் 

தற்போது நமதூரிலும் அல்லாஹ்வின் ரஹ்மத்தான மழை அவ்வப்போது எட்டிப்பார்க்கின்றது இன்ஷா அல்லாஹ் செடியன் குளம் நிறையுமளவுக்கு அல்லாஹ் இந்த வருடமும் மழையை இறக்கலாம் என்பதால் போர்க்கால நடவடிக்கையாக செடியன்குளத்தின் நீர் வெளியேற்றும் கிணற்றுப்பாதையை உடனடியாக செப்பனிட்டு இந்த வருட மழைநீரை தேக்கிவைத்து மக்களுக்கு நீண்டநாள் கோடையிலும் பயன்கிடைக்க செய்ய வேண்டுகிறோம்.


பிலால் நகர் வருடாவருடம் வெள்ளத்தால் பாதித்து வரும் நிலையில், செடியன் குளத்திலிருந்து பொங்கி வழியும் தண்ணீர் அதன் வடிகால் பகுதியிலுள்ள ஆக்கிரமிப்பை அகற்றினாலேயே அமைதியாக ஓடிவிடும். அதற்கு மாற்றமாக இப்படி அடுப்படி ஊதாங்குழலை பதித்து பொங்கிப் பெருகும் வெள்ளநீரை கொண்டு செல்ல நினைத்தால் மீண்டும் வெள்ளத்தால் பாதிக்கப்படப்போவது பிலால் நகர் தான் என்பதால் உடனடியாக .இந்த ஊதாங்குழல் சைஸ் பைப்புகளை அகற்றிவிட்டு வடிகால் வாய்க்காலை சுத்தப்படுத்தும் வழியை பார்ப்பதே சிறந்தது என சம்பந்தப்பட்டோருக்கு சொல்லி வைக்கின்றோம்.