அதிரை பசுமை

அதிரை பசுமை
அவன் தான், தன்னுடைய அருள் (மாரிக்)கு முன், நற்செய்தியாக (குளிர்ந்த) காற்றுகளை அனுப்பிவைக்கிறான்; அவை கனத்த மேகங்களைச் சுமக்கலானதும் நாம் அவற்றை இறந்து கிடக்கும் (வறண்ட) பூமியின் பக்கம் ஓட்டிச் சென்று, அதிலிருந்து மழையைப் பொழியச் செய்கின்றோம்; பின்னர் அதைக் கொண்டு எல்லாவிதமான கனிவகை (விளைச்சல்)களையும் வெளிப்படுத்துகின்றோம் - இவ்வாறே நாம் இறந்தவர்களையும் எழுப்புவோம். (எனவே இவற்றை யெல்லாம் சிந்தித்து) நீங்கள் நல்லுணர்வு பெறுவீர்களாக. (ஒரே விதமான மழையைக் கொண்டே) வளமான பூமி தன் இறைவன் கட்டளையைக் கொண்டு (செழுமையாகப்) பயிர் (பச்சை)களை வெளிப்படுத்துகிறது; ஆனால் கெட்ட களர் நிலம் சொற்பமான விளைச்சலையே வெளிப்படுத்துகிறது; நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்வாறே நாம் வசனங்களை விவரிக்கின்றோம். ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்) : 57,58

Tuesday, November 18, 2014

மீத்தேனும் தமிழக அழிவும்


அல்குர்ஆன் கூறுகிறது
2:205   وَإِذَا تَوَلَّىٰ سَعَىٰ فِي الْأَرْضِ لِيُفْسِدَ فِيهَا وَيُهْلِكَ الْحَرْثَ وَالنَّسْلَ ۗ وَاللَّهُ لَا يُحِبُّ الْفَسَادَ
2:205. அவன் (உம்மை விட்டுத்)திரும்பியதும், பூமியில் கலகத்தை உண்டாக்கவே முயல்வான்; விளை நிலங்களையும், கால்நடைகளையும் அழிக்க முயல்வான்; கலகத்தை அல்லாஹ் விரும்புவதில்லை.
=========================================================
மீத்தேனும் தமிழக அழிவும்.

மீத்தேனும் கூடங்குளமும் அதன் பாதிப்பும். ஆரியமும், திராவிடமும் செய்யும் மறைமுக இனபடுகொலை திட்டங்கள்.













மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு_ Anti Methane Project Federation's photo.


 
மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு_ Anti Methane Project Federation's photo.டெல்டாவை பாலைவனமாக்கும் மீத்தேன் ஒப்பந்ததில் கையெழுதிட்டது யார்? உடன் இருந்தோர் யார் யார்?

மீதேன் வாயுவை உற்பத்தி செய்வது தொடர்பாக தமிழக அரசுக்கும் கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்பரேஷன் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU) கையெழுத்தானது. சென்னை ஜார்ஜ் கோட்டையில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழக அரசு சார்பாக தொழில் துறையின் முதன்மைச் செயலர் ராஜிவ் ரஞ்சன் மற்றும் கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அலுவலருமான யோகேந்திரகுமார் மோடி ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த நிகழ்ச்சியில் சுரங்கம் மற்றும் கனிமத் துறை ஆணையர் தங்க பெருமாள் கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக இயக்க அலுவலர் பிரசாந்த் மோடி பொது மேலாளர் எஸ்.ராம்மூர்த்தி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

No comments: