அதிரை பசுமை

அதிரை பசுமை
அவன் தான், தன்னுடைய அருள் (மாரிக்)கு முன், நற்செய்தியாக (குளிர்ந்த) காற்றுகளை அனுப்பிவைக்கிறான்; அவை கனத்த மேகங்களைச் சுமக்கலானதும் நாம் அவற்றை இறந்து கிடக்கும் (வறண்ட) பூமியின் பக்கம் ஓட்டிச் சென்று, அதிலிருந்து மழையைப் பொழியச் செய்கின்றோம்; பின்னர் அதைக் கொண்டு எல்லாவிதமான கனிவகை (விளைச்சல்)களையும் வெளிப்படுத்துகின்றோம் - இவ்வாறே நாம் இறந்தவர்களையும் எழுப்புவோம். (எனவே இவற்றை யெல்லாம் சிந்தித்து) நீங்கள் நல்லுணர்வு பெறுவீர்களாக. (ஒரே விதமான மழையைக் கொண்டே) வளமான பூமி தன் இறைவன் கட்டளையைக் கொண்டு (செழுமையாகப்) பயிர் (பச்சை)களை வெளிப்படுத்துகிறது; ஆனால் கெட்ட களர் நிலம் சொற்பமான விளைச்சலையே வெளிப்படுத்துகிறது; நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்வாறே நாம் வசனங்களை விவரிக்கின்றோம். ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்) : 57,58

Thursday, October 16, 2014

காதிர் முகைதீன் கல்லூரி என்சிசி மாணவ மாணவிகள் பங்கேற்ற மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி !


அதிரை காதிர் முகைதீன் கல்லூரி என்சிசி சார்பில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் ஏ.ஜலால் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பேரணியில் மழைநீர் சேகரிப்பை பற்றி விழிப்புணர்வு உண்டாக்கும் வாக்கியங்களை கொண்ட பலகைகளை கையிலேந்தி மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்க ஊர்வலமாக அதிரையின் முக்கிய பகுதிகளில் வலம் வந்தனர். இதில் காதிர் முகைதீன் கல்லூரி லியோ கிளப் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இன்றைய சூழலில் மழைநீரை சேகரிப்பது பற்றிய முக்கியத்துவம் மற்றும் அச்சேகரிப்பின் கட்டாயம் ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் இப்பேரணி அமைந்தது. மேலும் மாணவர்களுக்கு பலவகையான மழை நீர் சேமிப்பு முறைகள் பற்றியும் செயல் விளக்கம் காண்பிக்கப்பட்டது. தேசிய மாணவர் படை பிரிவின் திட்ட அதிகாரி மேஜர் முனைவர் எஸ். கணபதி இதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார்.










Thanks to news source: Adirai News

No comments: