அதிரை பசுமை

அதிரை பசுமை
அவன் தான், தன்னுடைய அருள் (மாரிக்)கு முன், நற்செய்தியாக (குளிர்ந்த) காற்றுகளை அனுப்பிவைக்கிறான்; அவை கனத்த மேகங்களைச் சுமக்கலானதும் நாம் அவற்றை இறந்து கிடக்கும் (வறண்ட) பூமியின் பக்கம் ஓட்டிச் சென்று, அதிலிருந்து மழையைப் பொழியச் செய்கின்றோம்; பின்னர் அதைக் கொண்டு எல்லாவிதமான கனிவகை (விளைச்சல்)களையும் வெளிப்படுத்துகின்றோம் - இவ்வாறே நாம் இறந்தவர்களையும் எழுப்புவோம். (எனவே இவற்றை யெல்லாம் சிந்தித்து) நீங்கள் நல்லுணர்வு பெறுவீர்களாக. (ஒரே விதமான மழையைக் கொண்டே) வளமான பூமி தன் இறைவன் கட்டளையைக் கொண்டு (செழுமையாகப்) பயிர் (பச்சை)களை வெளிப்படுத்துகிறது; ஆனால் கெட்ட களர் நிலம் சொற்பமான விளைச்சலையே வெளிப்படுத்துகிறது; நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்வாறே நாம் வசனங்களை விவரிக்கின்றோம். ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்) : 57,58

Monday, October 13, 2014

வாட்டர் பக்கெட் சவாலுக்கு தயாரா?

மூன்றாவது உலகப் போர் தண்ணீருக்காகத்தான் நடக்கும் எனும் சூழலில் , வருங்கால சமுதாயத்திற்கு நிலத்தடி நீரை விட்டு வைத்து செல்ல வேண்டும்! தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை பல சூழலியல் விஞ்ஞானிகள் வலியுறுத்தி வருகிறார்கள்! ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் மிகவும் வலியுறுத்துகிறது!

பெருக்கெடுத்து ஓடும் நதிக்கரையில் இருந்தாலும் நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள் எனும் நபிகள் நாயகம் அவர்கள் இறைவனை வழிபட அவசியமான ஒளு எனும் அங்க சுத்திக்கு கூட 3 முறைக்கு மேல் கழுவுதல் அநீதி என வரையறை வைத்து உள்ளார்கள்!

இதனால் தான் தமிழகத்தின் பழைய பள்ளிவாசல்களில் ஒலுச் செய்த தண்ணீர் வாய்க்கால் மூலம் சிறுநீர் கழிக்கும் இடத்துக்கு செல்லும்! ஆனால் இன்று அந்த நடைமுறைகள் இல்லை!

மேலும் இதில் நபிகளாரிடம் நாம் பின்பற்ற வேண்டிய ஒரு நடைமுறை உள்ளது!532. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ஃபரக் கொள்ளளவு கொண்ட பாத்திரத்தில் குளிப்பார்கள். நானும் அவர்களும் ஒரே பாத்திரத்தில் குளிப்போம்.புஹாரியில் இந்த ஹதீஸ் ஏழு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

இதை பின்பற்றினால்நாம் ஒவ்வொரு நபரும் நாளொன்றுக்கு சுமார் 20 லிட்டர் தண்ணிரை சேமிக்க முடியும்! எப்படி?

வாட்டர் பக்கெட் சவாலுக்கு தயாரா?

மூன்றாவது உலகப் போர் தண்ணீருக்காகத்தான் நடக்கும் எனும் சூழலில் , வருங்கால சமுதாயத்திற்கு நிலத்தடி நீரை விட்டு வைத்து செல்ல வேண்டும்!  தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை பல சூழலியல் விஞ்ஞானிகள் வலியுறுத்தி  வருகிறார்கள்! ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் மிகவும் வலியுறுத்துகிறது!

பெருக்கெடுத்து ஓடும் நதிக்கரையில் இருந்தாலும் நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள் எனும் நபிகள் நாயகம் அவர்கள் இறைவனை வழிபட அவசியமான ஒளு எனும் அங்க சுத்திக்கு கூட 3 முறைக்கு மேல் கழுவுதல் அநீதி என வரையறை வைத்து உள்ளார்கள்!

இதனால் தான் தமிழகத்தின் பழைய பள்ளிவாசல்களில் ஒலுச் செய்த தண்ணீர் வாய்க்கால் மூலம் சிறுநீர் கழிக்கும் இடத்துக்கு செல்லும்!  ஆனால் இன்று அந்த நடைமுறைகள் இல்லை!

மேலும் இதில் நபிகளாரிடம் நாம் பின்பற்ற வேண்டிய ஒரு நடைமுறை உள்ளது!532. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ஃபரக் கொள்ளளவு கொண்ட பாத்திரத்தில் குளிப்பார்கள். நானும் அவர்களும் ஒரே பாத்திரத்தில் குளிப்போம்.புஹாரியில் இந்த ஹதீஸ் ஏழு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

இதை பின்பற்றினால்நாம் ஒவ்வொரு நபரும் நாளொன்றுக்கு சுமார் 20 லிட்டர் தண்ணிரை சேமிக்க முடியும்! எப்படி?  

நாம் குளிக்கும் போது நம் கால்களுக்கு இடையில் ஒரு வாளியை வைத்தால் நாம் குளித்து முடிக்கும் போது 20 லிட்டரை சேமிக்கலாம்! அதன் மூலம் நம்  உடுத்தி குளித்த ஆடைகளை அலசுவதோடு, நமது  கழிவறை பயன்பாட்டுக்கு பயன்படுத்தலாம்!

இதன் மூலம் நிலத்தடி நீரை மிச்சப்படுத்துவதோடு மட்டுமன்றி அந்த நீரை   எடுக்க பயன்படும் மின்சாரமும்  மிச்சமாகும்! அந்த மின்சாரத்தைப் பெற எரிக்கும் நிலக்கரி , புவி வெப்பநிலை என பல நன்மைகள் உண்டு!

ஒரு நபருக்கு 20 லிட்டர் என்றால் கோடிக்கணக்கான மக்கள் பின்பற்றினால் என்னவாகும் என்று எண்ணிப் பாருங்கள்! 

என் தாத்தா கற்றுத் தந்த நடைமுறையை பல வருடமாக நான் பின் பற்றி வருகிறேன்!நீங்களும் பின்பற்றுங்கள்!பரப்புங்கள்! நன்மை பெறுங்கள்! 

 ஐஸ் பக்கெட்' ரைஸ் பக்கெட்டை விட நன்மை பபயக்கும் விஷயம் வாட்டர் பக்கெட் சவால்! 

நீங்கள் தயாரா?

நாம் குளிக்கும் போது நம் கால்களுக்கு இடையில் ஒரு வாளியை வைத்தால் நாம் குளித்து முடிக்கும் போது 20 லிட்டரை சேமிக்கலாம்! அதன் மூலம் நம் உடுத்தி குளித்த ஆடைகளை அலசுவதோடு, நமது கழிவறை பயன்பாட்டுக்கு பயன்படுத்தலாம்!

இதன் மூலம் நிலத்தடி நீரை மிச்சப்படுத்துவதோடு மட்டுமன்றி அந்த நீரை எடுக்க பயன்படும் மின்சாரமும் மிச்சமாகும்! அந்த மின்சாரத்தைப் பெற எரிக்கும் நிலக்கரி , புவி வெப்பநிலை என பல நன்மைகள் உண்டு!

ஒரு நபருக்கு 20 லிட்டர் என்றால் கோடிக்கணக்கான மக்கள் பின்பற்றினால் என்னவாகும் என்று எண்ணிப் பாருங்கள்!

என் தாத்தா கற்றுத் தந்த நடைமுறையை பல வருடமாக நான் பின் பற்றி வருகிறேன்!நீங்களும் பின்பற்றுங்கள்!பரப்புங்கள்! நன்மை பெறுங்கள்!

ஐஸ் பக்கெட்' ரைஸ் பக்கெட்டை விட நன்மை பபயக்கும் விஷயம் வாட்டர் பக்கெட் சவால்!

நீங்கள் தயாரா? 

Sengis Khan அவர்களின் முகநூல் செய்தி

No comments: