அதிரை பசுமை

அதிரை பசுமை
அவன் தான், தன்னுடைய அருள் (மாரிக்)கு முன், நற்செய்தியாக (குளிர்ந்த) காற்றுகளை அனுப்பிவைக்கிறான்; அவை கனத்த மேகங்களைச் சுமக்கலானதும் நாம் அவற்றை இறந்து கிடக்கும் (வறண்ட) பூமியின் பக்கம் ஓட்டிச் சென்று, அதிலிருந்து மழையைப் பொழியச் செய்கின்றோம்; பின்னர் அதைக் கொண்டு எல்லாவிதமான கனிவகை (விளைச்சல்)களையும் வெளிப்படுத்துகின்றோம் - இவ்வாறே நாம் இறந்தவர்களையும் எழுப்புவோம். (எனவே இவற்றை யெல்லாம் சிந்தித்து) நீங்கள் நல்லுணர்வு பெறுவீர்களாக. (ஒரே விதமான மழையைக் கொண்டே) வளமான பூமி தன் இறைவன் கட்டளையைக் கொண்டு (செழுமையாகப்) பயிர் (பச்சை)களை வெளிப்படுத்துகிறது; ஆனால் கெட்ட களர் நிலம் சொற்பமான விளைச்சலையே வெளிப்படுத்துகிறது; நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்வாறே நாம் வசனங்களை விவரிக்கின்றோம். ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்) : 57,58

Saturday, December 13, 2014

அதிரை மக்களுக்கு அதிரை பிறையின் முக்கிய வேண்டுகோள்!




இந்தப் பதிவை வாசிப்பவர்கள், படிப்பதோடு மட்டும் நிறுத்திவிடாமல் நடைமுறைப் படுத்தவும் முயற்சி செய்யுங்கள்.
 
சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என்றால் ஊரை சுத்தம் செய்ய சொல்லவில்லை மாறாக நமது வீட்டையும் வீட்டை சுற்றியுள்ள பகுதிகளையும் சுத்தமாக வைத்திருந்தாலே பொதுமானதாகும், இப்படி ஒவ்வொருவரும் தன் வீட்டையும் வீதியையும் சுத்தமாக வைத்திருந்தால் நம் ஊரே சுத்தமாகிவிடும்.

வீட்டில் உள்ள குப்பைகளை எந்தவொரு சிந்தனையுமின்றி சாலைகளில் கொட்டுகின்றோம். அதனால் வீதியில் எவ்வளவு துர்நாற்றம் வீசுகிறது. சுற்றுச்சூழல் பாதிப்படைகிறது என்று சிந்திப்பதில்லை.

வீட்டு கொல்லையில் குப்பைகளை சேர்த்து வைத்து வாராவாரம் குப்பைகளை பேரூராட்சி குப்பை அள்ளும் வண்டி வரும் பொழுது கொட்டி விடலாம். ஆனால் நாம் நமது வீடு சுத்தமானால் போதும், சாலையில் கொட்டினால் யார் கேட்கப்போறது என்ற சுயநலப் போக்குதான் இன்று நமதூரில் தெருவுக்கு தெரு குப்பைகள் குவிந்து கிடப்ப
ற்கு காரணம்.நான் கண்ட ஒரு சம்பவம்! 'சமீபத்தில் ஒரு நாள் மழையையும் பாராமல் துப்புரவு ஊழியர்கள் குப்பைகளை அள்ளினார்கள். ஆனால் அடுத்த 3 மணி நேரத்தில் குப்பைகள் அப்பகுதி முழுவதும் குவிந்து கிடக்கிறது. இது யாரின் தவறு? சற்று சிந்தியுங்கள்!                                                                              

யார் தவறு செய்தாலும் அதை சுட்டிக்காட்டுவது ஒரு ஊடகத்தின் கடமை. அது மக்களாக இருந்தாலும் சரி ஆட்சியாளர்களாக இருந்தாலும் சரியே. அந்த வகையில் நமதூரில் குவியும் குப்பைகளுக்கு மக்களும் ஒரு காரணம் தான்.

நூருல் அஹமது இப்னு ஜஹபர் அலி (அதிரை பிறை)
http://www.adiraipirai.in/2014/12/blog-post_43.html

இனி குப்பைகளை வீதியில் வாரி வீசாமல் முறையாக கொல்லைபுறங்களில் சேமித்து அதை முறையாக காலத்தே அகற்றுவதற்கும் ஒவ்வொருவரும் சபதமேற்போமாக!
 

No comments: