அதிரை பசுமை

அதிரை பசுமை
அவன் தான், தன்னுடைய அருள் (மாரிக்)கு முன், நற்செய்தியாக (குளிர்ந்த) காற்றுகளை அனுப்பிவைக்கிறான்; அவை கனத்த மேகங்களைச் சுமக்கலானதும் நாம் அவற்றை இறந்து கிடக்கும் (வறண்ட) பூமியின் பக்கம் ஓட்டிச் சென்று, அதிலிருந்து மழையைப் பொழியச் செய்கின்றோம்; பின்னர் அதைக் கொண்டு எல்லாவிதமான கனிவகை (விளைச்சல்)களையும் வெளிப்படுத்துகின்றோம் - இவ்வாறே நாம் இறந்தவர்களையும் எழுப்புவோம். (எனவே இவற்றை யெல்லாம் சிந்தித்து) நீங்கள் நல்லுணர்வு பெறுவீர்களாக. (ஒரே விதமான மழையைக் கொண்டே) வளமான பூமி தன் இறைவன் கட்டளையைக் கொண்டு (செழுமையாகப்) பயிர் (பச்சை)களை வெளிப்படுத்துகிறது; ஆனால் கெட்ட களர் நிலம் சொற்பமான விளைச்சலையே வெளிப்படுத்துகிறது; நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்வாறே நாம் வசனங்களை விவரிக்கின்றோம். ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்) : 57,58
Showing posts with label வேண்டுகோள். Show all posts
Showing posts with label வேண்டுகோள். Show all posts

Tuesday, October 21, 2014

கோடைகாலத்தில் தண்ணீர் பஞ்சத்தை தவிர்க்க மழைநீரை சேமிப்போம்! அக்கறையான வேண்டுகோள்!

தஞ்சை மாவட்ட கடலோர பகுதியில் தற்போது நல்ல மழை பெய்து வருகின்றன. கடந்த இரண்டு வருடங்களாக பருவமழை இல்லாதலால் நமது நிலத்தடி நீர் முற்றிலுமாக குறைந்து போய் உள்ளன. கோடை காலங்களில் நமது பகுதியில் தண்ணீர் பஞ்சம் இருந்தன அதனால் இந்த ஆண்டு பருவமழை நன்றாக பெய்து வருவதால் இதை பயன்படுத்தி நமது பகுதியில் உள்ள குளம், குட்டைகளை தூர் வாரி ஆழப்படுத்தி வரும் மழைநீரை சேமித்து வைத்தோமானால் கோடைகாலங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டதாவறு பார்த்துகொள்ளலாம்.

இதைவிட முக்கியமானது வீடுகளில் மழைநீர் சேமிப்பது. மழைநீர் சேமிப்பு என்பது சிலபேர் தெரியாமல் தண்ணீர் தொட்டிகட்டி சேமிப்பது என்று தவறாக புரிந்துகொண்டு அதை செயல்படுத்தவில்லை மழைநீர் சேமிப்பு என்பது நமது மாடியில் விழும் மழைநீரை நேரடியாக நமது கிணறு அல்லது போர்வேல் அருகில் 4 அடி விட்டு 3.அடி அகலமும் 8.அடி உயரம் குழியும் தோண்டி ஓரத்தில் சிமிண்ட் உரையோ அல்லது கல்லோ வைத்து கட்டி அந்த பள்ளத்தில் கருங்கல் ஜல்லிகளை அதில் நிரப்ப வேண்டும்.

மழைநீரை நேரடியாக அதில் விட்டோமானால் நமது நிலத்தடிக்கே தண்ணீர் போய் கிணறும் நிறையும். தஞ்சை மாவட்ட மேல்பகுதியில் நிலத்தடி நீர் குறைய காரணம் கடந்த  கருணாநிதி அவர்களின் ஆட்சியில் ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டமாகும் வருடம் முழுவதும் ராட்ச போர்வேல் போட்டு கொண்டு செல்வதால் வரும் காவிரி நீர் மேல் பகுதியிலயே சேமிக்கப்படுகிறது அதனால் நமக்கு தண்ணீர் கிடைக்க வாய்ப்பில்லை இந்த கூட்டு குடிநீர் திட்டம் நல்ல திட்டமாக இருந்தாலும் தற்போது செய்திகளில் வருவது அதிர்ச்சி அடைய வைக்கின்றன சில சமூக விரோதிகளால் ராமநாதபுரம் பகுதியில் குழாய்கள் உடைக்கப்பட்டு இங்கிருந்து போகும் தண்ணீர் வீண்விரையம் ஆகிறது அதுமட்டுமல்ல தற்போது அதிமுக (ஜெயலலிதா) ஆட்சியில் மேலத்தஞ்சை பகுதியில் இருக்கும் அணையை உயர்த்தி கட்டும்பணி நடந்துகொண்டு இருக்கிறது அவர்கள் சேமித்தது போக மீதம் உள்ளதுதான் நமக்கு வரும் எந்த ஆட்சி வந்தாலும் கடை மடை பகுதியான நம் பகுதி புறக்கணிக்கப்படுகிறது அதனால் அதற்கு சிறந்த வழி மழைநீர் சேமிப்பதே இதை ஒவ்வருவருக்கும் எடுத்து சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் 

....PLEASE SHARE......
அன்புடன் ...அ.நெய்னாமுகமது


மிகவும் அவசியமானதொரு வேண்டுகோள் என்பதால் நன்றியுடன் மீள்பதிவு செய்யப்படுகிறது.

Thanks to: அதிரை எக்ஸ்பிரஸ்