அதிரை பசுமை

அதிரை பசுமை
அவன் தான், தன்னுடைய அருள் (மாரிக்)கு முன், நற்செய்தியாக (குளிர்ந்த) காற்றுகளை அனுப்பிவைக்கிறான்; அவை கனத்த மேகங்களைச் சுமக்கலானதும் நாம் அவற்றை இறந்து கிடக்கும் (வறண்ட) பூமியின் பக்கம் ஓட்டிச் சென்று, அதிலிருந்து மழையைப் பொழியச் செய்கின்றோம்; பின்னர் அதைக் கொண்டு எல்லாவிதமான கனிவகை (விளைச்சல்)களையும் வெளிப்படுத்துகின்றோம் - இவ்வாறே நாம் இறந்தவர்களையும் எழுப்புவோம். (எனவே இவற்றை யெல்லாம் சிந்தித்து) நீங்கள் நல்லுணர்வு பெறுவீர்களாக. (ஒரே விதமான மழையைக் கொண்டே) வளமான பூமி தன் இறைவன் கட்டளையைக் கொண்டு (செழுமையாகப்) பயிர் (பச்சை)களை வெளிப்படுத்துகிறது; ஆனால் கெட்ட களர் நிலம் சொற்பமான விளைச்சலையே வெளிப்படுத்துகிறது; நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்வாறே நாம் வசனங்களை விவரிக்கின்றோம். ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்) : 57,58

Thursday, March 26, 2015

2050-ல் உலகமே தண்ணீருக்கு அடித்துக் கொள்ளும் !!?

adiraitiyawest

2050ஆம் ஆண்டில் உலகம் தண்ணீருக்காக சண்டை போட்டுக்கொள்ளும் நிலை உருவாகும் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது.
அமெரிக்காவின் ’வைலி இன்டர்டிஸிப்ளினரி ரிவ்யூஸ்’ என்ற பத்திரிக்கை நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இது பற்றி குறிப்பிட்டுள்ளது. உலகில் தண்ணீரின் பயன்பாடு இப்போது உள்ளது போன்றே தொடர்ந்தால், இந்த நூற்றாண்டின் மத்தியில் பெரும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்று கூறியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக தண்ணீரின் பயன்பாடு மற்றும் மக்கள் தொகை பெருக்கம் ஆகியவற்றை அடைப்படையாக கொண்டு இந்த அறிக்கையை தயாரித்துள்ளனர்.
மேலும் அந்த அறிக்கையில் அவர்கள் குறிப்பிட்டுள்ளதாவது, புதிய தொழில்நுட்பங்கள், விழிப்புணர்வு காரணமாக, 1980-ஆம் ஆண்டு முதல் நீரின் பயன்பாடு குறைந்துள்ளது என்பது உண்மை.
அதே சமயத்தில், தேவையான நீரை உற்பத்தி செய்வதும் தேக்கம் அடைந்துள்ளது.
தற்போது உலக மக்கள்தொகை சுமார் 700 கோடியாகும். 2050-ஆம் ஆண்டில் இது 960 கோடியாக அதிகரிக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
பயன்படுத்திய நீரை மறுசுழற்சி செய்தல், கடல் நீரிலிருந்து உப்பைப் பிரித்தெடுப்பதில் புதிய தொழில்நுட்பம் உருவாதல் ஆகியவைதான் இந்தப் பிரச்னைக்குத் தீர்வாக அமையும் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thanks to: http://adiraitiyawest.blogspot.ae/2015/03/2050.html

No comments: